மனு எழுத பணம் கொடுக்க வேண்டுமா?
இல்லை. அரசு அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வதற்குக் கட்டணம் கிடையாது. இந்த மையத்திலும் கட்டணம் கிடையாது. யாராவது பணம் கேட்டால் அது தவறு.
இலவச வழிகாட்டி
யாரும் சொல்லித் தரவில்லை. அவ்வளவுதான். இந்தப் பக்கத்தைப் படித்தால் நீங்களே எழுதலாம். முடியவில்லை என்றால் மையத்திற்கு வாருங்கள் — இலவசமாக எழுதித் தருகிறேன்.
படி 1 · எந்த அலுவலகம்?
தவறான அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது கிடப்பில் போடப்படும். முதலில் இதைச் சரியாகத் தேர்ந்தெடுங்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு நாள். வட்டாட்சியரும் அன்று இருப்பார் என்பதால் ஒரே இடத்தில் இரண்டு அலுவலகங்களையும் சேர்த்துச் சந்திக்க முடியும்.
படி 2 · எப்படி எழுதுவது
அழகான தமிழ் தேவையில்லை. தெளிவு போதும். ஆனால் இந்த ஏழும் இல்லாவிட்டால் மனு பலவீனமாகிவிடும்.
அலுவலரின் பதவிப் பெயரும் அலுவலக முகவரியும் மேலே. பெயர் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, பதவி போதும்.
பெயர், தந்தை பெயர், முழு முகவரி, கிராமம், ஊராட்சி, தொலைபேசி எண். இது இல்லாவிட்டால் பதில் வர வழி இல்லை.
"மேலப்புதுக்குடி நாடார் தெற்குத் தெருவில் மூடப்படாத கிணற்றை மூடித் தர வேண்டுதல்" — இப்படி. இரண்டு பிரச்சினைகளை ஒரே மனுவில் சேர்க்காதீர்கள்.
எப்போதிலிருந்து பிரச்சினை. எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே யாரிடம் சொன்னீர்கள், எப்போது. உணர்ச்சி வார்த்தைகளை விட தேதிகள் வலிமையானவை.
தெரிந்தால் குறிப்பிடுங்கள். தெரியாவிட்டால் விடுங்கள் — ஆனால் மையத்தில் கேட்டால் சொல்லித் தருகிறேன். சட்டப் பிரிவு உள்ள மனு வேறு மாதிரி நடத்தப்படும்.
"நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எழுதாதீர்கள். "இந்தக் கிணற்றைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பித் தர வேண்டும்" என்று சரியாக என்ன வேண்டும் என்பதை எழுதுங்கள்.
புகைப்படம், முந்தைய மனுவின் ரசீது, ஆவண நகல். புகைப்படம் ஒரு பக்க வாதத்திற்குச் சமம்.
படி 3 · கொடுத்த பிறகு
இதைப் பலரும் விட்டுவிடுகிறார்கள். பிறகு ஆறு மாதம் கழித்து "மனு வரவே இல்லையே" என்று சொல்லப்படும்போது ஆதாரம் இருக்காது.
ஒன்று அலுவலகத்தில் கொடுக்க. இன்னொன்றில் அலுவலக முத்திரை, தேதி, கையெழுத்து வாங்கி உங்களிடம் வைத்துக் கொள்ள.
பெரும்பாலான அலுவலகங்களில் பதிவு எண் கொடுப்பார்கள். அதைத் தனியாக ஒரு நோட்டில் தேதியுடன் எழுதி வையுங்கள்.
அதே அலுவலகத்தில் முந்தைய மனு எண்ணைக் குறிப்பிட்டு நினைவூட்டல் மனு கொடுங்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் "என் மனு எண் ___ மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்று கேளுங்கள். கட்டணம் பத்து ரூபாய். பதில் முப்பது நாட்களுக்குள் கட்டாயம். இதுதான் மிகவும் பயனுள்ள கருவி.
வார்டு உறுப்பினர் → ஊராட்சித் தலைவர் → ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் → வட்டாட்சியர் → கோட்டாட்சியர் → மாவட்ட ஆட்சியர். ஒவ்வொரு படியிலும் முந்தைய ரசீதை இணைத்துவிடுங்கள்.
கேள்விகள் · அடிக்கடி கேட்கப்படுபவை
இல்லை. அரசு அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வதற்குக் கட்டணம் கிடையாது. இந்த மையத்திலும் கட்டணம் கிடையாது. யாராவது பணம் கேட்டால் அது தவறு.
இல்லை. தமிழில் எழுதலாம். அரசு அலுவலகங்களில் தமிழ் மனு முழுமையாக ஏற்கப்படும்.
மையத்திற்கு வாருங்கள். சொன்னதைக் கேட்டு நானே எழுதுவேன். படித்துக் காட்டுவேன். சரி என்று சொன்ன பிறகுதான் கையெழுத்து அல்லது கைரேகை.
சட்டப்படி அப்படி இல்லை. மனு ஒரு உரிமை, ஒரு உதவி அல்ல. யார் கொடுத்தாலும் பதிவு செய்யப்பட வேண்டும், ரசீது கொடுக்கப்பட வேண்டும்.
இல்லை. அது சட்டப்படி உங்களுக்குள்ள உரிமை. விண்ணப்பிக்கக் காரணம் சொல்லத் தேவையில்லை என்பதே சட்டம்.
ஆம். மனு கொடுத்தவர்களின் விவரங்கள் வேறு எந்தத் தேவைக்கும் — அரசியல் உட்பட — பயன்படுத்தப்படுவதில்லை. இது நான் வைத்திருக்கும் கடுமையான விதி.
நேரில் · மையத்திற்கு வாருங்கள்
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, நிலம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் பட்டா நகல், முந்தைய மனு ரசீது இருந்தால் அதுவும் — இவற்றை எடுத்து வாருங்கள். இருபது நிமிடத்தில் மனு தயார்.
மேலப்புதுக்குடி, புதுக்குடி, சேரன்மகாதேவி ஒன்றியம், திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி / WhatsApp: +91 86102 96021
கட்டணம்: இல்லை.